மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார். சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை […]

இந்நிய டூடேவின் சர்வே ரிசல்ட், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெறும் நிலை

இந்தியாவின் முன்னனி பத்திரிகை நிறுவனமான “இந்நிய டூடே”, இந்தியா-“Cvoter Mood of the Nation” (MOTN) என்னும் தேர்தல் கருத்து கணிப்யை நடத்தி முடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், தேர்தல் இன்று நடக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக,அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 2024 […]

ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்

உண்மையின் அச்சமற்ற பரப்புரையாளர் என்று பாராட்டப்படும் ஜூலியன் அசாஞ்ச் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். ‘விக்கிலீக்ஸ்’ வலைத்தளத்தின் நிறுவனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ச் அடிப்படையில் ஒரு கணினி நிரலியலாளர். ஜுலியன் அசாஞ்ச் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால் தனது அறிவுத் திறனால் மிகப்பெருமளவிற்கு செல்வம் சேர்த்து பெரும் பணக்காரராக உருவாகியிருக்கலாம், இல்லை புதியக் கண்டுபிடிப்புகளின் மூலம் காப்புரிமை சொத்துக்களை சேர்க்கும் அறிவியல் நிபுணராகக் கூட ஆகியிருக்கலாம். வல்லரசுகளின் உளவுத்துறையில் அதிஉயர்ந்த பதவியையும், புகழையும் பெற்றிருக்கலாம். ஆனால் அவரால் […]

தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட அரசியல் நோக்குகளின் எல்லைகளை கடந்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 17 நாளாயிற்று. தன் குற்றச்சாட்டுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. “உங்களிடம்தான் அது இருக்கிறது” என்று கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழக் கதையைப் போல் கதை விட்டுச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த அவதூறுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை வீறாப்பாக அறிவித்துக் குறைந்தது 15 நாளாயிற்று. அவரும் எவ்விதச் சான்றும் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று எதிர்க் கோரிக்கையும் வைத்தார். ஆக, அவர் எவ்விதச் சான்றும் […]

மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த முதல்வர் பிரன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக் காட்டி வரலாற்று இயங்கியல் பொருண்மியத்தின் மையக் கோட்பாட்டை விளக்கினேன். மார்க்ஸ் மறைந்த பின்… அவரது படிப்பறையில் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கு என்ன சான்று? சீமானிடமோ அவருக்கு சப்பை கட்டுகிறவர்களிடமோ இந்த வினாக்களுக்கு […]

பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்குக் கேடு வினைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் […]