தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-

1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை. அண்ணாவின் சாதனைகள்:- கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார். 🔷சமூக நலம்: நியாயவிலைக் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி திட்டம். 🔷கல்வி : ஏழை […]
மார்புக்கச்சை உள்ளாடையும் கலாச்சார காவலர்களும் :

சில நாட்களுக்கு முன்பு கலாட்டா மீடியா ( Galatta Media) என்ற இணையவழி சேனலில் ஒரு பெண் பெண்கள் உள்ளாடையான மார்புக்கச்சை ( brassiere / Bra) பற்றி விளக்கம் கொடுத்து, எந்த வகையான மார்புக்கச்சையை யார் பயன்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கி கொண்டு இருந்தார். இத்தனை ஆங்கிலத்தில் ” Try on haul” என்று குறிப்பிடுவர். நவீன சந்தைப்படுத்தல் முறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முறை இது. வெறுமனே ஒரு பெண் ஒரு மார்புக்கச்சை அணிந்து […]
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார் திருச்சி தோழர்.ஆசிட் தியாகராஜன் அத்தகைய கருஞ்சட்டைத் தோழர்கள் பலர் வீரத்துடன் இயக்கத்திற்காக இருந்தார்கள் சக தோழர்களை […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச் சொல்வது போல் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சி விதி. (மற்றொன்று முதலிய [முதலாளித்துவ] அமைப்பின் இயக்கு […]
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள் பட்ட பல இன்னல்களை போக்கவும் கர்னாடக மாநில சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் நாகப்பா என்ற […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச ஆச்சாரம், சாதி ஆச்சாரம், மத ஆச்சாரம், பழக்க வழக்கம் என்கின்ற பல வகையான மார்க்கங்களைப் பின்பற்றியே […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?

பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல் அல்லது சொல்லியத்தை (வாக்கியம்) நம்பி இவ்வளவு முகன்மையான கருத்தாடலில் நிலை எடுப்பதற்கு மாறாக பெரியாரின் கட்டுரை […]
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

செந்தில் மள்ளர் புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் மேற்கோள் காட்டும் விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்பதை சீமான் ஆதரவாளர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு நாள் விடுதலை இதழாக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முற்பட்டுள்ளார்கள். சரி, அந்த விடுதலை இதழை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லட்டும். பொறுமையாகக் காத்திருப்போம். பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்கட்டும், காட்டுகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படியே இருக்கட்டும், அது வரை சீமான் தந்தை பெரியார் மீதான அவதூறை […]
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்

ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று ஈன தனமாய் காட்சியளிக்கிறது. ஊடகத்தை பார்த்தால் நாம் இந்த தமிழ் நாட்டில் உள்ளோமா இல்லை பக்கத்து […]