மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் – காலநிரல்

25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையவுள்ளவுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக இந்த ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை தடுக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட நடவடிக்கைகள் அதன்பின் எடுக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் […]

தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது – ♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட […]

தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!

தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின் நிதியை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிகளை பிற […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவற்றில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது மற்றும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. மசோதாக்களை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநரின் செயலுக்கு எதிராக, தமிழக […]

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்‌. தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் மற்ற […]

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!

தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது மத்திய அரசு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாஜக அமைச்சர்கள் கூறும் ஆணவமுள்ள பேச்சுகளும், தமிழர்களின் […]

மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு

சென்னையில் மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலரும் சிறந்த உணர்வுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஷண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் […]

மாநில DISHA குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய உரை!

நான்காவது மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ.பெரியசாமி அவர்களே, திரு. மா.சுப்ரமணியன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களே, துறையின் செயலாளர்களே, துறைத் தலைவர்களே, அரசுசாரா அமைப்பின் நிர்வாகிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். […]

கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு, கிராமப்புற மக்களை ஈடுபடுத்தி, பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் கேரளா மாபெரும் வெற்றி […]

பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்குக் கேடு வினைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் […]