கர்நாடகாவில் புதிய சாதி கணக்கெடுப்பு: 80 நாட்களுக்குள் முடிக்க உயர் கட்டளை – காங்கிரஸ் தலைமை திடீர் உத்தரவு

பத்தாண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பின் தரவுகள் காலாவதியாகி விட்டதால், புதிய சமூக தரவுகளை தொகுப்பதற்காக 60–80 நாட்களுக்குள் புதிய சாதி கணக்கெடுப்பை நடத்துமாறு காங்கிரஸ் உயர்மட்ட தலைமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதிய கணக்கெடுப்பு ஏன் அவசியம்? 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காந்தராஜு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சாதி தரவுகள் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பல சமூகங்கள் அந்த அறிக்கையில் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறைகளை […]
2026-27ல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் மக்கள்தொகை மற்றும் சாதி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்பு

நியூடெல்லி : மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தாமதமாகிய 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு முதல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனுடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது நாட்டில் மக்கள்தொகை மற்றும் சமூக கட்டமைப்புகளைப் பற்றிய விரிவான தரவுகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். கணக்கெடுப்பு எப்போது? முதல் கட்டமாக வீடுகளின் பட்டியலிடும் பணிகள் நடைபெறும்; அதன் பின்பு மக்கள் தொகை மற்றும் சாதி கணக்கெடுப்பு இரண்டாவது கட்டமாக […]
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார். பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது என்பதற்கான ஆதாரங்களுடன் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது –தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது என்பது, பிரதமர், எதிர்க்கட்சித் […]
‘நரேந்திர சரணடைதல்’: பாகிஸ்தான் மோதலில் மோடியை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி!
போபால், மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உடன்பட்டதாகக் கூறி, அவரை “நரேந்திர சரணடைதல்” எனக் கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மோடி தலைமையிலான பாஜக அரசு தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கட்டியெழுப்பிய வலிமையான ஒப்பனை ஓர் உள்நாட்டு கண்மாயாகவே இருக்கிறதோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. போபாலில் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ராகுல், பாகிஸ்தானுடனான மோதல் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம்: தமிழகத்தில் சட்டமாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முக்கியமான சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா மூலம், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையின்றி, நியமன முறையில் உள்ளாட்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும். சட்டமசோதாவின் பின்னணி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநில அரசின் முக்கிய திட்டமாக இந்த சட்டமசோதா கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]
“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

மத நம்பிக்கையால் பணி நீக்கம் நீதியா? ஒரு மதத்தை கடைபிடிக்கக் கூடிய ராணுவ அதிகாரி இன்னொரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்க மறுத்தார். ஆகையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாமுவேல் என்கிற இந்திய ராணுவ அதிகாரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை வகித்து வந்தார். 2021 அன்று இந்து மத விழாவிற்கு சார்பு அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் சாமுவேல் நிராகரித்துவிட்டார் .இந்நிலையில் disobedience of comment என்று சொல்லி அவரை பணி நீக்கும் செய்தது இந்திய […]
தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின் தனது உரையில், “நம்முடைய கொடி எங்கெல்லாம் பறக்கிறது என்பதைக் காண என் கண்கள் நாடும்” எனத் […]
மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

பெண்களின் மகப்பேறு விடுப்பு என்பது,ஒரு வேலைவாய்ப்பு நலச்சலுகையில்லை; அது அவர்களின் இனப்பெருக்க உரிமையின் ஒரு அங்கமாகவும், வாழ்வதற்கான உரிமையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. இந்த அடிப்படையை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், பெண்கள் மீதான தொழில்நுட்ப இடையூறுகளுக்குள் பதுக்கப்பட்டிருந்த பாலின விருத்தத்தைக் கண்டித்து, சமூக நியாயத்திற்கு வழிகாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தனது மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு கேட்டதற்காக, அந்த உரிமையை மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை […]
ரோஹித் வெமுலா மசோதா: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கல்வியில் புதிய நீதி பயணம்

புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ரோஹித் வெமுலாவின் பெயரிடப்பட்ட வரைவு மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ரோஹித் வெமுலா (விலக்கு அல்லது அநீதி தடுப்பு) (கல்வி மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) மசோதாவின் விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று […]
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக இந்த கோமாளி கும்பலின் தரவுகள், கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் என அனைத்திற்கும் பதில் கூறும் விதமாகவும், குறிப்பாக […]