லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

75 வயதில் ஓய்வு பெறுவது குறித்து நான் ஒருபோதும் பேசவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், தான் 75 வயதில் ஓய்வு பெறுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “நான் 75 வயதில் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது அந்த வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றோ ஒருபோதும் கூறியதில்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, இந்திய அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவர்களின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு ஒரு புதிய திசையை அளித்துள்ளது. பாஜகவின் […]

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் ‘75 வயது’ கருத்து: பிரதமர் மோடியின் எதிர்காலம் குறித்த தீவிர அரசியல் விவாதம்!

நாக்பூர், ஜூலை 9, 2025: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (RSS) தலைவர் மோகன் பாகவத், 75 வயது குறித்த தனது சமீபத்திய கருத்து, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, மோகன் பாகவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இந்த ஆண்டு செப்டம்பரில் தங்கள் 75-வது பிறந்தநாளை எட்டவுள்ள நிலையில், பாகவத்தின் இந்தக் கருத்து பிரதமர் மோடியின் அரசியல் எதிர்காலம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமை மாற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் […]

மோடி அரசு “தேசிய கல்விக் கொள்கை” பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சி – மாணவர் அணியின் எதிர்ப்பு, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதியாய் வென்ற கலாச்சாரத்தின் போராட்டம்

2020ல் கொண்டு வரப்பட்ட “தேசிய கல்விக் கொள்கை” (NEP) என்ற பெயரில், மோடி அரசு ஒரு சீரற்ற, ஒரே மொழி திணிப்பு அரசியலை நாடு முழுவதும் கட்டாயமாக்க முயற்சிக்கிறது. ‘மூன்று மொழிக் கொள்கை’ என்ற அழகான பெயருடன் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் அடிப்படையில் நடக்கும் செயல்பாடுகள், இந்தி இல்லாத மாநிலங்களில் உள்ள கலாசார அடையாளங்களை அழிக்கும் வகையிலேயே செயல்படுகிறது. அதன் சமீபத்திய எடுத்துக்காட்டு – லட்சத்தீவுப் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முயற்சி. மூன்று மொழிக் கொள்கை […]

‘சுதேசி’ பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

கான்பூர்: “நமது நாட்டின் பணம் நமது எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். அது நமது சொந்த முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சுதேசி’ பொருட்களைப் பயன்படுத்துவது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தக்க ஒரு தேசிய கடமையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் நடைபெற்ற சிக்ஷா வர்க் முகாமில் உரையாற்றிய அவர், மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களைப் பங்கேற்கச் செய்து, சுதேசி பொருட்களை […]