கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு, கிராமப்புற மக்களை ஈடுபடுத்தி, பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் கேரளா மாபெரும் வெற்றி […]
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு வர முயன்ற பல நபர்களை இதேபோல் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ராஜபாளையத்தில் […]
பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் எனவும் தீர்ப்பு குறிப்பிட்டது. முன்னர் பிரதீப் ஜெயின் மற்றும் சௌரப் சந்திரா வழக்குகளில் […]
தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின் பாணியில் விஜய்யும் ஒரு ரோட் ஷோவை (Road Show) நடத்தியுள்ளார். மக்களிடத்தில் பல பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். […]
ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.
கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே வந்து நிற்பது ஜல்லிக்கட்டு. “வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை திமிர் கொண்டு அடக்கும் […]
நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!
தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை நேற்று (13/01/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டது மஹிந்திரா நிறுவனம். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, திரு. வேலுச்சாமி உள்ளிட்ட சிறந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். “மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகிறது. இதில் அதிகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் […]
ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?

விஜய்-புஸ்ஸி ஆனந்த் மோதல்: தமிழக வெற்றி கழகத்தில் தந்திரமான போட்டிபுஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு, விஜய்யின் எதிர்ப்பு – கட்சியின் எதிர்காலம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி மற்றும் தவெகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ஜான் ஆரோகியசாமி தமிழக வெற்றி கழகத்தால் 2026 தேர்தலில் 2% வாக்குகளை கூட பெற முடியாது என்று விமர்சிக்கிறார். […]
“பெரியார் மீதான அவதூறு: சீமான் பரப்பிய தவறான தகவல்களுக்கு விளக்கம்”

பெரியாரின் உண்மையான கருத்துகளை சிதைத்து, அவதூறு பரப்பும் சீமான் மற்றும் அதற்கு எதிரான சான்றுகளின் விளக்கம். “உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோடு , உடன் பிறந்த சகோதரியோடு கலவி வைத்துக் கொள்” என்று தந்தை பெரியார் குடியரசு கட்டுரையில் எழுதியதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள் சீமானும் அவரது தம்பிகளும். பெரியார் எந்த கட்டுரையிலும், மேடையிலும் இந்த கருத்தை எழுதவோ, கூறவோ இல்லை. 1945 ஆம் ஆண்டு பெரியார் குடியரசு இதழில் “உறவுமுறை” என்ற தலைப்பில் […]