இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலின் சாட்சியாக கீழடி!

கங்கை சமவெளியைப் போலவே பழமை வாய்ந்த நகரம் தமிழ்நாட்டில் உறுதியாகும் மதுரையின் அருகே உள்ள கீழடி தொல்லியல் தளம், தமிழர்கள் மீண்டும் புறக்கணிக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளைக் கையிலெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட ரேடியோகார்பன் டேட்டிங் பரிசோதனையில், கீழடி கிமு 580 காலத்துக்குச் சேர்ந்தது என உறுதியாகப் பதியப்பட்டுள்ளது. இந்த தேதியீடு கீழடியில் நகரமயமாக்கல் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியதைக் குறிக்கிறது. இதே காலகட்டத்தில் கங்கை சமவெளியில் நகரங்கள் உருவானதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. […]