ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஒரு தொழிற்சங்கம் அமைந்ததுக்கு இந்த ஆர்ப்பரிப்பு தேவைதானா..

அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம். இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி. நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்டு சிரிக்கிறது முதலாளித்துவம். ஒப்பந்த தொழிலாளர்களை காட்டி நிரந்தர தொழிலாளர்களின் போராட்டங்கள் மழுங்கடிக்கும் உத்தியை […]