தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின் தனது உரையில், “நம்முடைய கொடி எங்கெல்லாம் பறக்கிறது என்பதைக் காண என் கண்கள் நாடும்” எனத் […]

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம் 

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி […]

அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு […]

மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

பெண்களின் மகப்பேறு விடுப்பு என்பது,ஒரு வேலைவாய்ப்பு நலச்சலுகையில்லை; அது அவர்களின் இனப்பெருக்க உரிமையின் ஒரு அங்கமாகவும், வாழ்வதற்கான உரிமையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. இந்த அடிப்படையை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், பெண்கள் மீதான தொழில்நுட்ப இடையூறுகளுக்குள் பதுக்கப்பட்டிருந்த பாலின விருத்தத்தைக் கண்டித்து, சமூக நியாயத்திற்கு வழிகாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தனது மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு கேட்டதற்காக, அந்த உரிமையை மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை […]

மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?

பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர் .ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் .. ” நான் சென்றது […]

கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்

2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை மாற்றி அமைத்து தர வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்ந்து […]

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ‘டிராமா’ என சாடும் திமுக வழக்கறிஞர் – உச்சநீதிமன்ற இடைநிறுத்த உத்தரவை வரவேற்பு

சென்னை: அமலாக்கத்துறையின் முட்டாள்தனத்திற்கு தான் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள எஃப்ஐஆர் முட்டாள்தனமானது என்று கூறியுள்ள அவர், டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளுக்கு வெளியில் இருந்த பேப்பரை எடுத்து டிராமா செய்ததாக தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு பின் அமலாக்கத்துறை சார்பாக ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் இந்த சோதனை […]

ED க்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் ..!கூட்டாட்சி அமைப்பை பாதிக்கிறது – பி ஆர் காவாய் 

டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ஏதேனும் நிதி முறைகேடுகள் உள்ளனவா? என்ற கோணத்தில் Enforcement Directorate (ED) தொடங்கிய விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. மேலும், நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ED பல்வேறு அரசியல் நோக்கங்களுடன் செயல்படுகிறது, என்றும், இது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைகளை பாதிக்கக்கூடியது,”என்ற கடுமையாக விமர்சனம் கூறினர். இதனடிப்படையில், தமிழ்நாட்டின் மாநில அரசு தாக்கல் செய்த மனுவில், ED தனது அதிகார வரம்புகளை மீறி, மாநில நிறுவனங்களில் தலையீடு செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு […]

அமலாக்கத் துறையின் அதிகார மீறல்: டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை இடைநிறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவு!

தமிழக அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம்) மீதான அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை மற்றும் சோதனைகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தற்காலிகமாக தடை விதித்தது. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மத்திய நிறுவனத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார், மேலும் சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலப் பொருள் என்பதால், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் விகிதாசாரமற்றதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானதாகவும் இருக்கலாம் என்று கண்டறிந்தார். தலைமை நீதிபதி கவாய் கடுமையான கருத்துக்களை தெரிவித்தார், அமலாக்கத்துறை ஒரு […]

துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்த தமிழக அரசு

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ. மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலபதி அரசியல் உள்நோக்கத்துடன் […]