ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது

சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாகச் சொல்லி அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக யுவ மோர்ச்சா தலைவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத கடைசியில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. அதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டு துல்லியமாகத் தகர்த்தது. […]