மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த முதல்வர் பிரன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. […]