மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குற்றாய்வு செய்யட்டும். ஆனால் உள்நோக்கத்துடன் பொய்ச் சான்று காட்டினால் பேசாமல் கடந்து போக முடியாது. எனக்கு […]
பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது எழுதினார்? என்ற கேள்விக்கு அவர் நேராக விடை சொல்லவில்லை. அவர் சார்பில் அவரிடம் அதிகாரம் பெற்று […]