பெரியார் உலகமயமாகிறார்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கமான ‘X’-ல் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், “சுதந்திரத்தை மறுவரையறை செய்த புரட்சி இது! சங்கிலிகள் அறுந்தன, சுயமரியாதை உயர்ந்தது! தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அடிப்படைவாதங்களை நொறுக்கி, சுயமரியாதையை உணர்த்தியது, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தது, மற்றும் சமூக மாற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. #ஆக்ஸ்போர்டில், பல […]

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இங்கிலாந்து பயணம்: சமூகநீதியும் திராவிட சிந்தனையும் உலக அரங்கில் வலுப்பெறுகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி, திராவிட சிந்தனை மற்றும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை உலக அரங்கில் எடுத்துரைக்கும் வகையில், செப்டம்பர் 4 மற்றும் 5, 2025 ஆம் தேதிகளில் இங்கிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொள்கிறார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் SOAS பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகள், தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் உலகளாவிய தாக்கத்தை பறைசாற்றும். நாள் 1: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் […]

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் செல்வாக்கே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்துச் செல்வதுதான். தந்தை பெரியார் 1925-ல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், சாதி ஒழிப்பு, சமூக நீதி, மற்றும் பெண்ணுரிமை போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கம் பின்னர் திராவிடர் கழகமாகவும், அதிலிருந்து 1949-ல் திமுகவும் உருவானது. இந்த இயக்கத்தின் நீட்சியாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, […]

தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!

சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில், பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, […]