மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!

தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது, அதற்கெதிராக தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியை ஒடுக்கி, இனக்கொலை நடந்தேற இந்திய வல்லதிக்கத்தோடு துணை நின்றதன் […]