கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம் போன்ற தனிநபர்கள் செய்த நற்செயல்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், ஓர் அரசே முழுமையாக இறங்கி, அதைத் துல்லியமாகவும், முழுமையான கண்காணிப்புடனும் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்முன் காட்டிய விழாவாக நேற்றைய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா’ அமைந்தது. அகரத்தின் விதை, அரசின் ஆலமரம் ! அகரம் இன்று ஆலமரமாகச் செழித்து அதன் விழுதுகளே தனி மரங்களாகப் போனாலும், அந்த வித்து சிவகுமார் போட்டதுதான். […]
என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ-யில் ஊழியர் பற்றாக்குறை: புதிய கல்விக் கொள்கைக்கு தடையாக உள்ளதா?

புதிய கல்விக் கொள்கை (NEP 2020) இந்தியக் கல்வியை உள்ளடக்கமும் சமத்துவமுமாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வர வேண்டிய முக்கிய கல்வி நிறுவனங்கள் — என்சிஇஆர்டி (NCERT) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) — ஆள் குறைவால் சீராக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு மட்டும் சிபிஎஸ்இயில் 779 பணியிடங்கள் காலியாக இருந்த போதும், அதில் வெறும் 20 இடங்களுக்கே நியமனம் செய்யப்பட்டது. அதேபோல், தேசிய கல்வி ஆராய்ச்சி […]