மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ஏற்பட்ட […]
மத்திய அரசின் அநீதிக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு நீதிக்கொண்டு வந்த நீதிமன்ற தீர்ப்பு! கல்வி உரிமைக்கான வரலாற்றுச் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த தீர்ப்பு, மத்திய அரசு கல்விக்காக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) உடன் கட்டாயமாக இணைக்க வேண்டியதில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது. இது தமிழக அரசின் குரலாக மட்டுமல்ல, நியாயத்தின் குரலாகவும் ஒலிக்கிறது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட Right to Education Act (RTE) இன் கீழ், 6–14 வயதுக்குள் உள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லா, கட்டாயமான கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும். இந்த […]
தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாடு அரசுக்குக் கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று தமிழக […]
மொழிக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு கல்வி நிதி மறுப்பு: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு

மத்திய அரசு ரூ.2,291 கோடிக்கு மேல் கல்வி நிதியை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் PM SHRI பள்ளிகள் போன்ற தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்த மாநிலத்தை கட்டாயப்படுத்த மத்திய அரசு நிதி அழுத்தத்தைப் பயன்படுத்துவதாக மாநிலம் குற்றம் சாட்டியது. மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 131வது பிரிவின் கீழ் தமிழக அரசு […]
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தலையீடு – “முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன!”

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை சவால் செய்யும் மனுக்களில் தலையிடக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக திங்கள்கிழமை பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டம் 1995 வக்ஃப் சட்டத்திலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும், இந்த மாற்றங்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்றும் வக்ஃப் சொத்துக்களின் தன்மையை மாற்றும் என்றும் முஸ்லிம்கள் உண்மையான அச்சங்களைக் கொண்டுள்ளனர் என்றும் அரசு வாதிட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “கேரளாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் மத […]
தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!

தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின் நிதியை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிகளை பிற […]
DMK: பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல’ – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்… “கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம். பேரிடர் நிதி என்பது பா.ஜ.க கட்சியின் நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ […]