செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது, இருவருக்கிடையிலான பனிப்போர் முடிவடைந்ததைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. அண்மைய சில வாரங்களாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே எடுத்துக் கூறாமல் தவிர்த்து வந்தார். அதிக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததை காரணமாக்கி, அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்ததன் பின்னணியில் இவர்களுக்கிடையே […]

பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக

பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஏறகனவே பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் இடங்களில் […]