பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி யாருக்கு பொருந்தி போகிறதோ இல்லையோ (தமிழ்) கடவுள் முருகனுக்கு பொருந்தி போகும். சங்க காலத்தில் குறிஞ்சி […]

பிலாஸ்பூர் வரைபடம்: ஜே.பி. நட்டாவின் அரசியல் எழுச்சியும், அவரது குடும்பம் நடத்தும் என்.ஜி.ஓ-வின் ஒத்த வளர்ச்சியும்

பிலாஸ்பூர்: பாஜகவின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) இன்று இந்திய அரசியலில் மிக முக்கியமான அரசியல் தலைவராக கருதப்படுகிறார். ஆனால் அவரது அரசியல் வளர்ச்சி தற்செயலான ஒன்று அல்ல; அதற்குப் பின்னே திட்டமிடப்பட்ட அரசியல் பயணமும், சமூக அமைப்புகளின் ஒத்த போக்கும் நிலைத்திருக்கின்றன. மாணவர் அரசியலிலிருந்து துவங்கிய அரசியல் பாதை 1980களின் ஆரம்பத்தில், ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1983-இல், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் […]

“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் அண்மைய கருத்துகளுக்கு தக்க பதிலளித்துள்ளார். வைரமுத்துவின் விளக்கம்: வழக்கம்போல் எக்காரணத்திற்கும் கவிதைமயமான வார்த்தைகளில் தன் […]

மகா கும்பமேளா: இறப்பு எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைத்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். ஆனால், அந்த சம்பவத்தில் உண்மையான இறப்பு எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை கடும் விமர்சனம் மேற்கொண்டார். பிபிசி வெளியிட்ட ஒரு விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், “கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார். ஜனவரி மாதத்தில், மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக மௌனி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடுவதற்காக அதிகாலை […]

‘உலகளவில் சிக்கித் தவிப்பதற்குப் பதிலாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெற்றது’ – மம்தா பானர்ஜி விமர்சனம்

பஹல்காம் தாக்குதல் பின்னணி: ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு சிறப்பு பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தது. மம்தாவின் கண்டனம் மற்றும் சட்டமன்ற தீர்மானம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த […]

சிராக் பாஸ்வான் பீகார் தேர்தலுக்குத் தயாரா? 2005-ல் ராம் விலாஸ் செய்ததை 2025-ல் மகன் மீண்டும் செய்யப்போகிறாரா?

2005-ல் ராம் விலாஸ் பாஸ்வான் லாலுவை அரசியல் மேடையில் சிக்கவைத்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது, 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பீகாரில் இன்னொரு பாஸ்வான் – அவரது மகன் சிராக் பாஸ்வான் – களத்தில் இறங்குகிறார். அந்த அப்பா-மகன் அரசியல் ஒற்றுமையை புரிந்துகொள்ள, பீகாரின் கடந்த 20 ஆண்டுகள் அரசியல் பரிமாணங்களை ஆராய வேண்டிய நேரம் இது. பாஸ்வான் – ஒரு மத்திய அமைச்சர், ஆனால் துணிவான தேர்தல் முடிவு மத்திய அமைச்சரவையில் இருக்கின்றாலும், சிராக் […]

அகண்ட் சிவசேனாவுக்கான அழைப்பு: “பாலாசாகேப்பின் உண்மையான பாரம்பரியம் ஒருங்கிணைப்பில்தான்!” – மூத்த தலைவர் கஜானன் கீர்த்திகர்

மும்பை: மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் நெருக்கமான உதவியாளரான, மூத்த சிவசேனா தலைவர் கஜானன் கீர்த்திகர், தற்போது பிளவுபட்டுள்ள சிவசேனாவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் குறித்து வெளிப்படையாகக் கூறியுள்ளார். உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கைகோர்த்து “அகண்ட் சிவசேனா” உருவாக்க வேண்டும் என்றார் அவர். 81 வயதான கீர்த்திகர், சிவசேனாவின் ஆரம்ப நாள்களிலிருந்தே கட்சிக்காக பணியாற்றியவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவர், பாலாசாகேப்பால் […]

ஒரே நாடு, ஒரே தேர்தல்: 2034ல் தொடக்கத்துக்கு வாய்ப்பு – குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி விளக்கம்

புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” (One Nation, One Election) யோசனையை நடைமுறைப்படுத்தும் முதல் வாய்ப்பு 2034 ஆக இருக்கலாம் என இந்த யோசனைக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தெரிவித்தார். வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில்…இந்த யோசனையின் நோக்கம், தேர்தல்களை ஒழுங்குபடுத்தி செலவினத்தை குறைத்து, நிர்வாக சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாகும். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களை […]

அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை அடுத்து கீழடி முதல் தொகுதி மறுவரையறை வரை ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை குறித்து ஆர் .ராசா […]

2026 தேர்தலில் பாஜக ஆட்சி என அமித் ஷா நம்பிக்கை: திமுக கடும் எதிர்வினை

தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலில் பாஜக ஆட்சி அமையப்போகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாதம், மாநில அரசியல் சூழலில் கடுமையான பதில்களைத் தூண்டியுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்கு வங்காளத்திலும் பாஜக வெற்றிபெறும் என்று அவர் ஊகிக்கிறார். அவர், “ஊழலால் பழிதூற்றப்பட்ட திமுக அரசை மக்கள் […]