முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுத்த சுய உதவிக் குழுக்கள் புரட்சி – மகளிர் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம்!

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHG) இயக்கம், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இது வெறும் கடன் வழங்கும் திட்டம் அல்ல, இது பெண்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான ஒரு முழுமையான தளம். இந்த இயக்கத்தின் வேர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன. இந்த மாபெரும் பயணத்தின் முதல் விதை, 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில், […]

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் என்பது, தந்தை பெரியார் கண்ட சமூகநீதிக் கனவுகளையும், பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும் […]

காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள் மூலம் ! ஒன்றை யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு நிகழ்வு வரும் வரை 99% உங்களுக்கு […]

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது நடவடிக்கை பார்ப்பனர்கள், உயர் சாதி என்று கருதி கொள்ளும் பார்ப்பன அடிமைகள், காங்கிரசு – ஆகியோரின் […]

அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?

இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree எனப்படும்) கொடூரமான போலீஸ் அராஜகத்தின் விளைவு. இது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆறு […]

ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

: ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆண்டாள் அன்னையின் வீடு…. அந்தப் பகுதி முழுவதும் அன்னையின் ராஜ்ஜியமே. பக்தி, பசுமை, பிராமணியம் எல்லாம் சேருந்த ஒரு “ஆர்தொடாக்ஸ் ஹோம்லி” நகர். ஆனா அந்த நகரம் சமீபத்தில் சில தர்ப்பை புள் கும்பலால் அசத்தும் அக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஷையில் சொல்லனும்னா, ” தீட்டாகிடுத்துடா அம்பி”. சும்மா தளுக்கு புள்ளுக்கு போதை ஆசாமி பார்ப்பன கும்பல் – நமக்கு ஃபர்ஸ்ட் நைட் சீன்ல மது குடிக்குற ஹீரோ மாதிரி, டீப்பா குடிச்சு, மணி […]

முன்தேர்தல் வாக்குறுதிகளுக்கு பின்னால் மறையும் வேலைவாய்ப்புகள்: ஹரியானாவில் 8,000 பணியிடங்கள் ரத்து – சுர்ஜேவாலா கடும் குற்றச்சாட்டு

ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 8,653 அரசு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை பாஜக அரசு தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவிலும் ஊடகங்களிடம் அளித்த பேட்டியிலும், “இது இளைஞர்களை ஏமாற்றும் மோசமான அரசியல் நாடகம்” என்று அவர் கண்டனம் தெரிவித்தார். அந்த பணியிடங்களில் முக்கியமாக ஹரியானா காவல்துறைக்கே 5,666 பணியிடங்கள் […]

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்: Y குரோமோசோம் மறைதல், விந்தணு எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு

மனித இனத்தில் ஆண்களின் இனப்பெருக்கம் மற்றும் மரபணு ஆரோக்கியம் குறித்த அறிவியல் ஆய்வுகள், கவலைக்கிடமான புதுப்புகழான முடிவுகளை வெளிக்கொண்டு வருகின்றன. குறிப்பாக, Y குரோமோசோம் — ஆண் இனத்தை தீர்மானிக்கும் முக்கிய மரபணு தொகுப்பு — காலப்போக்கில் சுருங்கி வருவதாகவும், சுமார் 11 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Y குரோமோசோம்: மரபணுக்களை இழக்கும் பயணத்தில் X குரோமோசோம் சுமார் 900 மரபணுக்களைக் கொண்டுள்ளது. ஆனால் Y குரோமோசோம் தற்போது சுமார் […]

ED சமன் விவகாரம்: நீதிமன்றம், வழக்கறிஞர்கள், மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பு!

அமலாக்கத்துறை (ED) — மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் நிதிச் சட்டங்களை மேற்கோளாக கொண்டு, அதனை எதிர்கட்சிகளையும் குறிவைக்கும் ஆயுதமாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன. பல முன்னணி தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் மாநில அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் செயல்படும் மூத்த வழக்கறிஞரான அரவிந்த் தாதர் மீது சமீபத்தில் ED அனுப்பிய சமன், மிகப் பெரிய சட்டப்பூர்வ மற்றும் அரசியல் விவாதத்திற்கு […]

மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜகவின் பதில் நியாயமா நிழலா?

ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் பாஜகவின் முயற்சி உண்மையை வெளிச்சமிட்டு உள்ளதா அல்லது அதனை மறைக்கும் நோக்கமா? 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான உயர்வு மற்றும் வாக்கு பதிவு நேரங்களில் காணப்பட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, தேர்தல் முறைகேடுகளைப் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதற்கு பதிலாக, மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழில் ஒரு கட்டுரை மூலம் பதிலளித்தார். […]