“நரவணே பொய் சொல்கிறாரா?” – நூல் விவகாரத்தில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!

ுருக்கம்

புது தில்லி: முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற நூல் விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நூல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் பதிப்பக நிறுவனமான பென்குயின் மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி: 2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது, பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகள் குறித்து நரவணே தனது நூலில் விமர்சித்துள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். இதற்குப் பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இன்னும் வெளியாகாத ஒரு நூலை ராகுல் காந்தி எப்படி மேற்கோள் காட்டலாம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் பதிலடி: இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை எழுப்பினார்:

  • நரவணே vs பென்குயின்: “தனது நூலை வாங்கும்படி நரவணேவே தனது ‘X’ தளத்தில் லிங்க் பகிர்ந்துள்ளார். முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்கிறாரா? அல்லது நூல் இன்னும் வெளிவரவில்லை என்று சொல்லும் பென்குயின் நிறுவனம் பொய் சொல்கிறதா?”
  • யாரை நம்புவது?: “புத்தகம் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தை விட, நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியையே நான் அதிகம் நம்புகிறேன். அரசுக்கும் பிரதமருக்கும் நெருக்கடி தரும் தகவல்கள் அதில் இருப்பதால் தான் இந்தத் தடுமாற்றம்.”

டெல்லி போலீஸ் விசாரணை: இதற்கிடையே, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நூலின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் கசிந்தது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும