கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம் போன்ற தனிநபர்கள் செய்த நற்செயல்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், ஓர் அரசே முழுமையாக இறங்கி, அதைத் துல்லியமாகவும், முழுமையான கண்காணிப்புடனும் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்முன் காட்டிய விழாவாக நேற்றைய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா’ அமைந்தது. அகரத்தின் விதை, அரசின் ஆலமரம் ! அகரம் இன்று ஆலமரமாகச் செழித்து அதன் விழுதுகளே தனி மரங்களாகப் போனாலும், அந்த வித்து சிவகுமார் போட்டதுதான். […]