இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய துணை அமைப்பான BHP (Bajrang Dal) ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சந்திரகுமார் […]

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின்னால் உள்ள பல சாத்தியக்கூறுகள்

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்து, இந்தியாவையும் உலகையும்ச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் சுவரை கடந்து அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீவிர விபத்துக்குள்ளானது. இந்த பயணத்தில் 242 பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இதனுடன், அருகிலிருந்த விடுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட […]

மகாராஷ்டிரா தேர்தல் மோசடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வந்த பதில்கள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லையா?

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம் — மகாராஷ்டிரா மாநில தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் வாக்காளர் பட்டியல் மோசடி. இதற்கான குற்றச்சாட்டுகளை இந்திய யூனியன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாகவே சுட்டிக்காட்டினார். இவை “Match-Fixing Maharashtra” என்ற தலைப்பில் X (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் பகிரப்பட்டு, பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு வந்த பதில்கள் — தேர்தல் ஆணையம் மற்றும் அரசு சார்ந்த ஊடகங்கள் வழங்கிய விளக்கங்கள் — […]

துப்ரியில் கலவரம் தீவிரம்: இரவில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்த அசாம் அரசு

துப்ரி, அசாம்: மாட்டிறைச்சி துண்டுகள் கோவிலின் அருகில் கிடைத்ததையடுத்து, அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் ஏற்பட்ட சமூக பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில அரசு ‘கண்டதும் சுட’ உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, கலவர சூழலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் பார்வையிட்ட பின் அறிவிக்கப்பட்டது. கலவரத்தின் காரணம்: கோவிலின் அருகே இறைச்சித் துண்டுகள் ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாள், துப்ரி நகரில் உள்ள […]

“கீழடி உண்மையை அவர்கள் ஏற்க முடியவில்லை” – பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழரின் தொன்மை அடையாளமாக விளங்கும் கீழடி, தமிழர் நாகரிகத்தின் பழமையைச் சர்வதேச ரீதியில் நிரூபிக்கும் ஒரு தொல்பொருள் சான்று. ஆனால், அந்த உண்மையை மறைக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு முயற்சி செய்கின்றன என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி பற்றி புதிய ரேடியோகார்பன் உறுதிப்பாடு – கிமு 580! சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்ட முக்கியக் கட்டுரையை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஸ்டாலின், அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விபரங்களை முன்வைத்தார்: “உண்மை அவர்களின் ஸ்கிரிப்ட்டுக்கு […]

சத்தீஸ்கர் மதுபான ஊழல்: காங்கிரஸ் பவன் உட்பட ரூ.6.15 கோடி சொத்துக்கள் ED-யால் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிளர்ச்சியூட்டியுள்ள மதுபான ஊழல் விவகாரத்தில், மத்திய அரசின் அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைகள், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002ன் கீழ் விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில், ED ரூ.6.15 கோடி மதிப்புள்ள மூன்று முக்கிய சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் யாவை? இவை அனைத்தும் மதுபான ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் கட்டப்பட்டதாக […]

இஸ்ரேல் ஈரான் போர் காட்சி:  ‘அதிபேரமைப்பு’ காலத்தின் புதிய சதுரங்கப் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது இன அழிப்பு கொடுமை நடந்தி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது இஸ்ரேல் -ஈரான் மோதல் என்பது வெறும் மத்திய கிழக்கின் பிராந்தியச் சம்பவம் அல்ல; உலக அரசியல் மேடை மெதுவாக அட்லாண்டிக்(அமெரிக்கா- ஐரோப்பா இடையில் உள்ள கடல்பரப்பு) பெருங்கடலிலிருந்து  இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக அமைந்துள்ளது. ரஷ்யா இத்தாக்குதலை கண்டித்து மேற்கத்திய சக்திகளின் ‘அழித்து ஆளும்’ உத்தியை வெளிக்கொணர்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ‘முத்துமாலை’ திட்டம் ( The string of […]

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணங்களை ஆராய உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது.

2025 ஜூன் 12 – ஒரு வரலாற்றுச் சின்னமான நாள். இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் இன்று மறக்க முடியாத கருப்பு தினமாக பதிவு செய்யப்பட்டது. லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விமானம் கீழே விழுந்தது. இந்த விபத்தில் மட்டும் 241 பேர் உயிரிழந்தனர். இதில் விமானத்தில் இருந்தவர்களும், தரையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பொதுமக்களும் உள்ளடங்கினர். இது வெறும் “விபத்து” என்று தட்டிக்கொணரக்கூடிய ஒன்று […]

இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலின் சாட்சியாக கீழடி!

கங்கை சமவெளியைப் போலவே பழமை வாய்ந்த நகரம் தமிழ்நாட்டில் உறுதியாகும் மதுரையின் அருகே உள்ள கீழடி தொல்லியல் தளம், தமிழர்கள் மீண்டும் புறக்கணிக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளைக் கையிலெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட ரேடியோகார்பன் டேட்டிங் பரிசோதனையில், கீழடி கிமு 580 காலத்துக்குச் சேர்ந்தது என உறுதியாகப் பதியப்பட்டுள்ளது. இந்த தேதியீடு கீழடியில் நகரமயமாக்கல் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியதைக் குறிக்கிறது. இதே காலகட்டத்தில் கங்கை சமவெளியில் நகரங்கள் உருவானதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. […]