தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய […]

பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் எனவும் தீர்ப்பு குறிப்பிட்டது. முன்னர் பிரதீப் ஜெயின் மற்றும் சௌரப் சந்திரா வழக்குகளில் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

செந்தில் மள்ளர் புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் மேற்கோள் காட்டும் விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்பதை சீமான் ஆதரவாளர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு நாள் விடுதலை இதழாக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முற்பட்டுள்ளார்கள். சரி, அந்த விடுதலை இதழை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லட்டும். பொறுமையாகக் காத்திருப்போம். பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்கட்டும், காட்டுகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படியே இருக்கட்டும், அது வரை சீமான் தந்தை பெரியார் மீதான அவதூறை […]

நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்

ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று ஈன தனமாய் காட்சியளிக்கிறது. ஊடகத்தை பார்த்தால் நாம் இந்த தமிழ் நாட்டில் உள்ளோமா இல்லை பக்கத்து […]

நியூ இந்தியா – அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE

உலகமே மிக வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மோது இந்தியாவில் மட்டும் மாட்டு கோமியமும், பாபா ராம்தேவ்களும், ஜக்கி வாசுதேவ்களும், கும்ப மேளா மரணங்களும், ராமர் கோவில் கதைகளும் பேசுபொருளாக மட்டுமில்லாமல் வாழ்வியல் முறையாகவும் இருந்து வருகிறது இது எப்படி சாத்தியம் ?? இந்தியாவை ஒரு நாடாக பார்ப்பதைவிட துணை கண்டமாக பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். புவியியல் சார்ந்த நிலம், கலாச்சாரம், பன்முகத்தன்மை என்று காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதையும் தாண்டி […]