`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!’ – புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தித்த இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் சந்தித்த தோல்வி அதிர்ச்சியில் இருந்து அக்கட்சிகள் இன்னும் மீள வில்லை. தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சொற்ப எம்.எல்.ஏ.க்களும் அணி மாறிவிடுவார்களோ என்ற அச்சம் உத்தவ் தாக்கரேயிக்கு எழுந்துள்ளது. எனவே அவர்கள் 20 […]
“தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்” – நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும் மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிப்புகளை சரிசெய்ய 125 ஜேசிபி இயந்திரங்கள், 250 ஜெனரேட்டர்கள், 26,000 […]
மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று காலையில் சந்தித்து பேசினர். முதலில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் […]